சாதாரண தரம் சித்தியடையவில்லையா? விசேட தொழில் பயிற்சி
2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கு அழைத்துச் செல்லும் வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.
மனிதவள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய சுமார் 98,000 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கணிதப் பாடத்தில் சித்தியடைந்து பின்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு சித்தியடைந்ததன் அடிப்படையில் தோற்றும் மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்களும் இத்திட்டத்திற்கு உள்வாங்கப்படுவர்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்கள் பிரதேச செயலக மட்டத்தில் இனங்காணப்பட்டு அவர்களின் திறமை, திறமைகள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.