வவுனியா பல்கலைக்கழகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்
இலங்கையின் 17வது பல்கலைக்கழகமாக, வவுனியா பல்கலைக்கழகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று (11) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகமானது, 1991ஆம் ஆண்டு வட மாகாணத்தின் இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு, 1997ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது.
கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம், இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.