அரசியல் விஞ்ஞானத்தை கற்று தொழில் பெற்றுக் கொள்ள முடியாது. டிமாண்ட் அதிகமுள்ள பாடத்தைக் கற்க வேண்டுமே – ஜனாதிபதி
அரசியல் விஞ்ஞானத்தை கற்று தொழில் பெற்றுக் கொள்ள முடியாது. டிமாண்ட் அதிகமுள்ள பாடத்தைக் கற்க வேண்டுமே என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடான பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மாணவி ஒருவருக்கு உபதேசம் வழங்கியுள்ளார்.
அரசியல் விஞ்ஞானத்தை உயர் தரத்திற்கு கற்ற மாணவி, இஸட் புள்ளி குறைந்தமையால் தனக்கு பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைக்க வில்லை எனவும் அது தொடர்பாக ஆராய்ந்து பார்க்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஜனாதிபதி பதிலளித்தார்.
தொழினுட்பம் தொடர்பான பாடங்களைக் கற்க கஸ்டப்பட வேண்டும் என்றும் அரசறிவியலுக்குப் பதிலாக நாட்டில் தொழிலுக்கு கேள்வி உள்ள பாடங்களைத் தெரிவு செய்து கற்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.