-சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
சமூக, பொருளாதார மாற்றங்கள், சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள அறிவு, ஆற்றல், ஒழுக்கமுள்ள சிறுவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது.
நாட்டின் நலனும் அபிவிருத்தியும் அபிமானமும் நிகழ்கால சிறார்களாகிய வளர்ந்துவரும் எதிர்கால சந்ததியினரின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது.
அரசாங்கம் என்ற வகையிலும் வளர்ந்தவர்கள் என்ற வகையிலும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான, உகந்த சமூக சூழலை உறுதிப்படுத்தும் சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதற்கு உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும்.
இத் தேவையை உணர்ந்து “நட்புமிகு தேசத்தில் – சிறார்களை வெற்றி பெறச் செய்வோம்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வாண்டின் உலக சிறுவர் தின தேசிய வைபவத்தின் ஊடாக மேற்குறிப்பிட்ட சிறந்த நிலைக்கு சிறுவர்களை கொண்டு செல்வதே நோக்கமாக அமைய வேண்டும்.
அந்த எதிர்பார்ப்புடனேயே பிள்ளைகளைப் பாதுகாப்போம் தேசிய செயற்திட்டம் உள்ளிட்ட சிறுவர்களின் பாதுகாப்பு, நலன்பேணல் மற்றும் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
அபிமானமும் பலமுமிக்க தேசத்தைக் கட்டியெழுப்பும் வகையில் பெற்றோர், பெரியோர், நிறுவனங்கள், அதிகாரிகள், கொள்கை உருவாக்குநர்கள், அரசியல்வாதிகள் ஆகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறுவர்களின் நன்மைக்காக கைகோர்த்து செயற்படுவோமாக.
இம்முறை உலக சிறுவர் தினக் கொண்டாட்டங்கள் சிறுவர்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும் வெற்றிகரமான கருத்தாழமிக்க முயற்சியாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கின்றேன். (Thinakaran)