அதிபர் ஆசிரியர் சங்கங்கள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள பிரச்சினை தொடர்பில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட தீர்வு தொடர்பில் கலந்துரையாடி முடிவொன்றுக்கு வரும் வரை குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
அதிபர் மற்றும் ஆசிரியர் சேவைகளை வரையறை சேவையாக பிரகடனப்படுத்துவதன் மூலம் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அமைச்சரவை உப குழு மேற்கொண்ட உடன்பாட்டை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அதன் அடிப்படையில் விரைவில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் தொழில் சங்கங்கள் அறிவித்துள்ளன.