அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் நிர்மாணிக்கப்பட்டுள்ள 200 பாடசாலைகளின் 200 திட்டங்களை ஒரே தினத்தில் கல்வித்துறைக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கி இந்த திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடங்கள், மூன்று மாடி வகுப்பறைக் கட்டடங்கள், ஆரம்ப கற்கைகள் வள நிலையம், தொழிநுட்ப விஞ்ஞானகூடம், நிர்வாகக் கட்டடம், கேட்போர் கூடும், பற்சிகிச்சை நிலையம், நுண்கலைக் கூடம், அதிபர் ஆசிரியர் விடுதிகள், மாணவர் விடுதிகள், பல்செயற்பாடு கட்டடம், சிற்றுண்டிச் சாலை என்பன இத்திட்டத்தில் உள்ளடங்குகின்றன.
இந்த 200 திட்டங்களுக்கும் சுமார் 3,938 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதன் தேசிய வைபவம் குருணாகல் மாவட்டத்தை மையப்படுத்தியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குளியாப்பிட்டி, புனித ஜோஸப் வித்தியாலத்தின் மூன்று மாடிக் கட்டடம், குளியாப்பிட்டி சாரனாத் வவித்தியாலயத்தின் அனைத்து வசதிகளும் அடங்கிய கேட்போர் கூடம், மற்றும் குளியாப்பிட்டி ஆசிரியர் பயிற்சி நிலையத்தின் புதிய நிர்வாகக் கட்டடம் ஆகியவற்றை பிரதமர் ரணில் விக்கரமசிங்க திறந்து வைக்கவுள்ளார்.
அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டு முதல் 2020 வரை செயற்படுத்தப்படவுள்ள திட்டத்திற்காக திட்டமிடப்பட்டுள்ள தொலை 65 000 மில்லியன் ரூபாய்களாகும். இது 10165 பாடசாலைகளில் செயற்படுத்தப்படவுள்ள 18000 திட்டங்களுக்கான செலவாகும்.