கல்வி மறுசீரமைப்பு மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு, திறந்த பல்கலைக்கழக ராஜாங்க அமைச்சின் செயலாளரும், கல்வி மறுசீரமைப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலாநிதி உபாலி எம். சேதர அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்
நேர்காணல்- அருண
தமிழாக்கம்- Jasar Jawfer. / www.teachmore.lk
கேள்வி: எதிர்காலத்தில், பாடசாலைக் கலைத்திட்டம் பாரிய மாற்றத்திற்கு உட்படவுள்ளது. அந்த சீர்த்திருத்தம் தொடர்பாக பேசுவோம்.
பதில்:
பாடசாலைக் கலைத்திட்டம் தொடர்பாக நாம் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டோம். தற்போது நடைமுறையில் உள்ள கலைத்திட்டம் எவ்வாறு மாற்றமடைய வேண்டும் என்பது தொடர்பாக நீண்ட காலமாக கலந்துரையாடி வருகிறோம். அதற்கேற்ப மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. பிள்ளைகளின் புத்தகப் பை பாரம் அதிகரித்துள்ளதாக முறைப்படுகிறார்கள். அது மிக நீண்ட காலமாக தொடரும் பிரச்சினை. தற்போது மனனமாக ஒப்புவிக்கும் முறையே காணப்படுகிறது. நாம் இவை தொடர்பாக கவனம் செலுத்தி உள்ளோம். திறமைகளை அடிப்படையாக் கொண்ட கலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். இதன் பிறகு மனப் பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவரை விட திறமை உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.
கேள்வி: இந்த முறையின் கீழ் பாடத்தை கற்பிக்கும் முறைகளில் மாற்றம் ஏற்படுமா?
பதில்:
learning centers system முறைக்கு நாங்கள் செல்கிறோம். பிள்ளைக்கு கற்பதற்கு தேவையானவற்றை நாங்கள் வழங்குவோம். வாகன சாரதியாக ஆசிரியர் இருக்க மாட்டார். மாணவர்கள் தான் இருப்பர். அதற்கான மொடியுல் முறை ஒன்றை நாம் தயாரிக்கிறோம்.
மொடியுல் முறை என்பது
பாடசாலைகள் ஆண்டுக்கு 210 நாட்கள் நடத்தப்படுகின்றன. வாரத்தில் ஐந்து நாட்கள். பாடசாலைகள் 42 வாரங்கள் நடைபெறுகின்றன. மூன்று தவணைகளாகப் பிரித்தால் தவணைக்கு 14 வாரங்கள் கிடைக்கின்றன. அந்த 14 வாரங்கள் பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் என்ன பெயர் சொன்னாலும் பரவாயில்லை. தேவை என்னவென்றால் கற்றலே.
ஒரு தவணையில் மாணவர்கள் எத்தனை மணித்தியாலங்கள் கற்க வேண்டும் என்பது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம். ஒரு மொடியுல் ஒரு நாளில் எத்தனை மணி என்ற அடிப்படையில் ஒரு மாணவர் 10 வாரத்திற்கு கற்றால், ஒரு க்ரடிட் கிடைக்கும். அந்த முறையில் தான் க்ரடிட் உருவாகின்றது. அந்த முறைக்கு authentic learning system என்றும் அழைக்கிறோம். அதன் மறு பக்கம் தான் vitual learning என்பதும்.
கேள்வி: இந்த முறைமையில் பிள்ளைகளின் மீது சுமத்தப்படும் பாரம் குறைகின்றதா?
பதில்:
கல்வி என்பது பிள்ளையில் உள்ளதை வெளியே எடுப்பதாகும். அது இப்போது நடப்பதில்லை. இப்போது என்ன நடக்கிறது. பிள்ளையின் தலையில் சுமையை ஏற்றுகிறது. நாங்கள் இதுவரை எதிர் பக்கத்தில் இருந்தோம். இப்போது நாம் என்ன செய்ய முயற்சிக்கிறோம் என்றால், பிள்ளைகளை கற்க அனுமதிக்க வேண்டும். அதற்கு தேவையான சூழலை உருவாக்கி வழங்கப்படும்.
உதாரணமாக, நீங்கள் வீட்டில் நுண்ணுயிரிகளைப் பற்றி அறியலாம். பாண் துண்டு, பழையதாகும் போது அதில் பூஞ்சனம் பிடிக்கின்றது. இதனை நீங்கள் காணும்போது, அது எப்படி உருவாகியது என்ற பிரச்சினை எழுகிறது. அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தான் புதிய முறை அறிமுகப்படுத்துகிறது.
கேள்விகள் எப்போதும் இருக்கும். அந்த கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல. பதிலைக் கண்டு பிடிக்க முடியாத மாணவருக்கு கற்பதற்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தரவுகள் உள்ளடக்கப்பட்ட content boxesமாணவர்களுக்கு வழங்கப்படும். தேவையான அனைத்து விபரங்களும் அதில் உள்ளன. அவ்வாறான ஒரு முறைக்குத் தான் நாம் செல்லவுள்ளோம்.
கேள்வி: பாடத்திட்டம் மாறும் ஒழுங்கு எவ்வாறு நிகழும்?
பதில்:
ஒரே வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் இப்போது ஒரே புத்தகத்தைக் கற்கிறார்கள். புதிய முறையின்படி, ஒரே தரத்தின் பாடத்திட்டம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படும். முதல் பகுதி அத்தியாவசிய கற்றல் கூறு என்று அழைக்கப்படுகிறது. அந்த பிரிவு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாகும். அந்த கட்டாய பகுதிக்கு ஐம்பது சதவீத பாடத்திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஐம்பது சதவிகிதத்தில் முப்பது சதவிகிதம் குழந்தைகளின் திறமை மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படலாம். குழந்தைகளின் திறன்கள், ஆற்றல்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப தொகுதிகளை வகைப்படுத்துகிறோம். தொகுதிகள் பிள்ளைகளால் தேர்ந்தெடுக்கப்படலாம்.
உதாரணமாக, ரத்னபுரியில் உள்ள ஒரு மாணவர் ஒருவருக்கு மாணிக்கக் கல் தொடர்பாகக் கற்க வேண்டும் என்றால் அவருக்கு அது தொடர்பான மொடியுலை தெரிவு செய்ய முடியும். தேயிலை தொடர்பாக கற்க ஆர்வமிருப்பின் அதற்கான மொடியுலும் காணப்படும்.
கேள்வி – மீதமுள்ள இருபது சதவீதம்?
பதில்:
மீதமுள்ள 20 சதவீதம் உடற்கல்வி, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்ற நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாகும். இப்போது ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு சுகாதரமும் உடற் கல்வியும் பாடம் முடிந்துவிட்டது. விளையாட்டுகளும் கட்டாயமில்லை. இதன் பிறகு இவை எல்லாம் கட்டாயமாகும். மாணவர்களுக்கு அவர்களின் ஆளுமையை வளர்ப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும். இவை முடிக்கும் போது, பிள்ளைகள் மன நிம்மதியடைவார்கள். இந்த புதிய முறையில் டியுசன் கல்வி முறைக்கு இடமில்லை. பாடசாலையை அடிப்படையாக் கொண்ட கற்றலுக்கு அதிக இடம் இருக்கும். பிள்ளைகளின் திறன்களையும் திறமைகளையும் பாடசாலையிலேயே அடையாளம் காணவும் முறைமை உதவுகிறது. பாடத்திட்டத்தில் மிகப் பெரிய மாற்றம் நிகழ உள்ளது.
கேள்வி: எப்போது இந்த முறை ஆரம்பமாகும்?
பதில்:
2023 ஆம் ஆண்டிலிருந்து இது ஆரம்பமாகும்
கேள்வி – எந்த வகுப்பிலிருந்து இது ஆரம்பமாகும்?
பதில்:
தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் 2022 இல் ஒரு பரீட்சார்த்த திட்டம் ஆரம்பிக்கப்படும். இந்த புதிய முறை ஒன்பது மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் மூன்று மொழிகளிலும் பரீட்சிக்கப்படும். எல்லா பாடசாலைகளிலும் ஒரே நேரத்தில் ஆரம்பிப்பது கடினம். நமது தவறுகளை சீர் செய்து கொண்டு தான் முன் செல்ல வேண்டும். தேசிய பரீட்சைகளுக்கு தோன்றும் மாணவர்கள் இந்த பரீட்சார்த்த திட்டத்தில் உட்படுத்தப்படமாட்டார்கள்.
கேள்வி – பரீட்சார்த்த திட்டத்தில் எத்தனை பாடசாலைகள் உட்படுத்தப்பட்டுள்ளன?
பதில்:
சுமார் 120 பாடசாலைகள் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும். பரீட்சார்த்த திட்டம் 1, 2, 6, 8 மற்றும் 9 ஆம் தரங்களில் ஆரம்பமாகும். 10 ஆம் தரத்தில் கூட ஆரம்பிக்கலாம். 10 ஆம் தரத்தை உட்படுத்தலாமா? என்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் முடிவு செய்யப்படும்.
கேள்வி: புதிய முறைமையில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எந்த ஆண்டு முதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது?
பதில்:
இது முதலில் 2024 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேள்வி: தேசிய கல்வி நிறுவனத்தில் இவ்வாறான மொடியுல் தயாரிப்பதற்கு திறமை கொண்ட மனித வளம் உள்ளதா?
பதில்:
அங்கு ஒரு பிரச்சனை இருந்தது. தீர்வாக அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கேள்வி – மொடியுல் தயாரிக்கப்பட்டுவிட்டனவா?
பதில்:
இதுவரை இல்லை. அது இப்போது தயார் செய்யப்படுகிறது.
கேள்வி: இப்போது பயன்படுத்தும் பாடப்புத்தகங்களுக்கு என்ன நடக்கும்?
பதில்:
தற்போதைய பாடநூல் நீக்கப்படும். புதிய முறையின் கீழ், பிள்ளைகளுக்கு செயல்நூல் மாத்திரமே வழங்கப்படும். ஒரே புத்தகத்தில் வேலை செய்யலாம். ஒவ்வொரு தவணைக்கும் செயல்நூல்கள் கிடைக்கும்
கேள்வி: பாடசாலை நேரம் மாறுமா?
பதில்:
நேரத்தை மாற்ற யோசனை இல்லை. ஆனால் இப்போது நாற்பது நிமிடங்கள் ஒரு பாடவேளையாக உள்ளது. இது ஒரு மணி நேரமாக மாறுகிறது. நாற்பது நிமிடங்களில் எதுவும் செய்ய முடியாது. பிள்ளைகளுக்கு ஒரே நேரத்தில் இருபது க்ரடிட்களைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு அமர்வதற்கு 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் குறைந்த பட்சம் 180 க்ரடிட் பெற்றுக் கொள்வது கட்டாயமானது.
கேள்வி – அந்த தேவையை பூர்த்தி செய்யாத பிள்ளைகளின் நிலைமை?
பதில்:
பலவீனமான மாணவர்களைப் பொறுத்தவரையில் இரண்டு, மூன்று க்ரடிட் பிரச்சினைகள் இருக்கலாம். அத்தகைய மாணவர்களுக்கு பரீட்சைக்குத் தோற்ற அதிக நேரம் தேவைப்படலாம். திறமையான மாணவர்கள் விரைவில் 180 க்ரடிட்களை முடிக்க முடியும். அத்தகைய மாணவர்கள் ஒரு வருடம் முன்னதாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றலாம். தற்போதைய முறையின் கீழ் ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பரீட்சைக்கு அமர வேண்டிய நிலை உள்ளது.
கேள்வி – க.பொ.த உயர் தரத்தில் மாற்றங்கள் எவ்வாறு நிகழ்கின்றன?
பதில்:
உயர் தர சீர்திருத்தங்கள் 2025 ஆம் ஆண்டில் ஆரம்பமாகும். இன்னமும் இதற்கு கை வைக்கவில்லை. ஆனால் சில தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று விளையாட்டை கட்டாயமாக்குவது. அத்துடன் கணினி திறனும் கட்டாயமானது. இதுபோன்ற மேலதிக செயற்பாடுகளில் ஈடுபடாமல் மூன்று ‘ஏ‘களை எடுத்துக் கொண்டாலும், பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாது.
கேள்வி: சீர்திருத்தங்களில் விசேட தேவையுடைய மாணவர்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படுகின்றனவா?
பதில்:
நிச்சயமாக. அத்தகைய பிள்ளகளுக்கு இப்போது பாடசாலைகளில் எந்த தொடர்பும் இல்லை. வசதிகள் இல்லாததால்.
கேள்வி: நீண்டகாலமாக எந்த வசதிகளும் இல்லையே.
பதில்:
அந்த வசதிகள் வழங்கப்பட வேண்டும். இப்போது ஒரு தேசிய பாடசாலை என்று சொல்வதற்கான அளவுகோல்கள் என்ன என்று நீங்கள் கேட்டால், யாருக்கும் தெரியாது. தேசிய பாடசாலைகளாக மாறுவதற்கு தேவையான அளவுகோல்கள் விரைவில் வகுக்கப்படும். ஒரு பாடசாலைக்கு தேவையான குறைந்தபட்ச வசதிகளையும் இது குறிப்பிடுகிறது.
கேள்வி – 1000 தேசிய பாடசாலைகளுக்கும் அந்த வசதிகள் கிடைக்குமா?
பதில்:
தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை ஆயிரம் அல்ல. 1169 ஆக உயரும். சுற்றியுள்ள பாடசாலைகள் தேசிய பாடசாலைகளின் ஊட்டப் பாடசாலைகளாக இணைகின்றன. சுற்றியுள்ள பிள்ளைகளுக்கு வசதிகளுடன் கூடிய பாடசாலைக்குச் செல்ல வாய்ப்புக் கிடைக்கும்.
கேள்வி: இந்த சீர்திருத்தங்கள் குறித்து பொது மக்கள் ஆலோசனை பெறப்படுகிறதா?
பதில்:
‘வியத்மக‘ கலந்துரையாடல்களின் காலத்திலிருந்தே பொதுமக்கள் கருத்து கோரப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கருத்துக்கள் பெறப்படுகின்றன. மாகாண மட்டத்தில் நடைபெறும் கலந்துரையாடல்களிலும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். கருத்து தெரிவிக்க ஒரு வலைப்பக்கமும் உள்ளது. தேவைப்பட்டால் பேஸ்புக் பக்கமும் மின்னஞ்சலும் அனுப்பும் வாய்ப்பும் உள்ளது. அவை பின்வருமாறு:
முகநூல்:
National education reforms
National education reforms interest group
கேள்வி: நீங்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றீர்களா? அல்லது தோல்வியடைந்தீர்களா? என்பதைக் கூறுவதற்கான நிலையான நிபந்தனைகள் உள்ளன. அந்த அமைப்பு மாறுகிறதா?
பதில்:
எதிர்காலத்தில் சில மாற்றங்கள் இருக்கும். நான்காம் வகுப்பில் தேசிய அளவில் மதிப்பீடு செய்ய முன்மொழியப்படுகிறது. முதன்மைக் காலம் முடிவதற்குள் பிள்ளைகளின் சரியான நிலையை அறிந்து கொள்வது அவசியம். நான்காம் வகுப்பில் உண்மையான நிலைமை தெரிந்தவுடன் அடுத்த ஆண்டில் அந்த மாணவரை முன்னேற்றும் பொறுப்பை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். அதனால்தான் நான்காம் வகுப்பில் ஒரு மதிப்பீடு செய்யப்படுகிறது. பின்னர் எட்டாம் வகுப்பில் மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க மற்றொரு தேசிய அளவிலான மதிப்பீடு செய்யப்படும். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பாகவும் மாற்றங்கள் இருக்கும்.
கேள்வி: தரம் 5 புலமப் பரிசில் பரீட்சையில் மாற்றம் இருக்குமா?
பதில்:
எல்லா மாணவர்களுக்கும் ஒரு தனி சுயவிவரத் தரவுத் தளம் உருவாக்கப்படும். பெற்றோருக்கும் அதனைப் பார்க்கும் வசதி உள்ளது. அதன்படி, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு தரவு உள்ளிடப்படும் போது, பிள்ளைகளின் மட்டத்தை அறிந்து கொள்ள முடியும். அவற்றைப் பற்றி அறிய தனியான புலமைப் பரிசில் பரீட்சை நடத்த வேண்டிய அவசியமில்லை.
கேள்வி: தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நடத்துவதற்கான வேறு நோக்கங்களும் உள்ளன.
பதில்:
1169 தேசிய பாடசாலைகள் கட்டப்பட்டு அவற்றுக்கான தேவை உருவாக்கப்பட்ட பின்னர் புலமைப் பரிசில் பரீட்சை பிரச்சினை எழாது.
கேள்வி:
அதாவது 2024 க்குப் பிறகு புலமைப் பரிசில் பரீட்சை நடத்த வேண்டிய அவசியமில்லை.
பதில்:
உதவித்தொகை இப்போது இறந்துவிடும். பிள்ளைகள் நல்ல பாடசாலைகளை விரும்புகிறார்கள். அந்த வசதிகள் கிடைக்கும்.
கேள்வி: புலமைப் பரிசில் பரீட்சை நடத்துவதன் நோக்கம் பிரபலமான பாடசாலைகளை வழங்குவது மட்டுமல்ல. ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க புதிய திட்டம் தயாரிக்கப்படுகிறதா?
பதில்:
உதவித் தொகை தேவைப்படும் பிள்ளைகளை அடையாளம் காண தனி திட்டம் அமைக்கப்படும். அத்தகைய மாணவர்களை அடையாளம் காண பரீட்சைகள் தேவையில்லை.
கேள்வி: பொதுமக்கள் கலந்துரையாடல்கள் ஆலோசனைகளின் பின்னர் சீர்திருத்த திட்டங்களில் மாற்றம் ஏற்படுமா?
பதில்
ஆரோக்கியமான திட்டங்கள் நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.
கேள்வி: நாட்டிற்கு புதிய கல்விச் சட்டம் தேவையாகியுள்ளதா?
பதில்:
கல்விச் சட்டம் தேவையில்லை. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கி அதை மாற்றுவது நல்லது. ஏனெனில் ஒரு சட்டம் தயாரிக்கப்பட்டால் அதை மாற்றுவது கடினம். ஒரு தேசிய கல்வி கொள்கை வகுக்கப்படுகிறது.
கேள்வி – தேசிய கல்வியியல் கல்லூரிகளில் மாற்றம் ஏற்படுமா?
பதில்:
அனைத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளும் தேசிய கல்வி நிறுவனத்தின் கீழ் கொண்டு செல்லப்படும்.
கேள்வி: ஆசிரியர் கல்வியாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர், இல்லையா?
பதில்:
ஆசிரியர் கல்வியாளர்கள் சேவையின் அதிகாரிகள் கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்ற விரும்புகிறார்கள். பல்கலைக்கழகங்களில் நிலவும் சுதந்திரத்தைப் பெறுவதையும் அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றுபவரை மீண்டும் கண்டுபிடிப்பது எளிதானது அல்ல. தொழிற்கல்வி கல்லூரிகளில் அவ்வாறு செய்ய முடியுமா? நாம் தொழில்முறை பல்கலைக்கழகங்களை உருவாக்க விரும்புகிறோம். பல்கலைக்கழகங்களில் பட்டதாரிகளைப் போன்ற ஆசிரியர்களை உருவாக்கினால், இந்த பாடசாலை முறையையும் நாம் இழந்து விடுவோம்.
கேள்வி: தேசிய கல்வி நிறுவனத்தின் கீழ் தேசிய கல்வியியல் கல்லூரிகளை கையகப்படுத்த சட்டரீதியான தடைகள் இருக்கிறதா?
பதில்:
அதற்காக நாங்கள் சட்டமா அதிபரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம். கல்லூரிகளை தேசிய கல்வி நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவதில் எந்த பிரச்சனையும் இல்லை.
.
Telegram :https://t.me/teachmorelk
WhatsApp :https://bit.ly/3bcZeKL
Viber : https://bit.ly/37uvCrl