கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பாடத்தின் முக்கியத்துவம்
தற்காலத்தில் ஆங்கிலப் பாடக் கல்வியின் முக்கியத்துவம் அதிகரித்த வண்ணம் உள்ளது.அந்த வகையில் தற்போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பாடத்தில்Cதர அல்லதுSதர சித்தி மிகவும் அடிப்படையான ஒரு விடயமாக கருதப்பட்டு வருகின்றது.இருப்பினும் மாணவர்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வு போதியளவு இல்லை என்பது கவலைக்குரிய விடயமே.
கடந்தஐந்து வருட சித்தி வீதத்தை உற்று நோக்கும் போது வடக்கு மாகாணம்28% இல் இருந்து51% ஆக தனது சித்தி வீதத்தை அதிகரித்திருப்பது சிறந்த ஒரு விடயமாகும்.
ஆண்டு |
வடக்கு மாகாணத்தின் சித்தி வீதம் |
2016 |
28.25% |
2017 |
31.89% |
2018 |
39.24% |
2020 |
46.09% |
2021 |
51% |
தொழிற்சந்தையில்..
தற்காலத்தில் தொழிற்சந்தையை நோக்குவோமாக இருந்தால் க.பொ.தசாதாரண தர ஆங்கிலப் பாடத்தில்C தர சித்தியானது கட்டாயமாக உள்ளது. உதாரணமாக கொமர்ஷல் வங்கி க.பொ.த சாதாரண தர ஆங்கிலப் பரீட்சையில்Aதர அல்லதுBதர சித்தியைஎதிர்பார்க்கின்றது.
நாம் கருத்திற் கொள்ள வேண்டிய அடுத்த விடயமாக பல மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சை நிறைவடைய க.பொ.த சாதாரண தர ஆங்கில பாடப் பரீட்சைக்கு 2ம் அல்லது 3ம் முறையாகத் தோற்றி C தர சித்தியைப் பெற முயல்கின்றனர்.எனினும் தற்போது அதிகளவான வெற்றிடங்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் ஆங்கிலம், கணிதம், தமிழ்உட்பட 6 பாடங்களில் C தர சித்தியை எதிர்பார்த்துள்ளன.எனவே 2ம்,3ம் தடவையாக தனிப்பாடத்திற்குத் தோற்றுவதானது ஓர் பயனற்ற செயற்பாடாகும் . இதனைக் கவனத்திற் கொண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை வழிப்படுத்துதல் வேண்டும். இதற்கு மேலதிகமாக அரச சாரதி வெற்றிடங்களில் கூட க.பொ.த சாதாரண தர ஆங்கிலப் பாடத்தில்Sதர சித்தியானது முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயமாகும்.
உயர்கல்வியில்..
2020/2021 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட கைநூலின் அடிப்படையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பாடம் சித்திபெற்ற மாணவர்கள் தமது உயர்தரப் பரீட்சைத் தெரிவையும் அடிப்படையாகக் கொண்டு மேலதிகமாக 22 துறைகளுக்கு விண்ணப்பிக்க கூடிய தகுதியினைப் பெறுகின்றனர்.
அத்துறைகளும் அத்துறைகளுக்கு விண்ணப்பிப்பதற்குத் தேவையான அடிப்படை க.பொ.த சாதாரண தர ஆங்கில பாடப் பெறுபேறுகளும் கீழ்வரும் அட்டவணையினூடாக காட்டப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கக்கூடிய கற்கை நெறிகள் |
க.பொ.த சாதாரணதர ஆங்கிலபாடப் பரீட்சையில் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைப் பெறுபேறு |
கணிய அளவையியல் |
C |
கலை (SP) – வெகுசன ஊடகம் |
S |
கலை (SP) – அரங்கேற்றல் கலை |
S |
கட்டடக்கலை |
S |
வடிவமைப்பு |
S |
சட்டம் |
C |
தொடர்பாடல் கற்கைகள் |
C |
பட்டினமும் நாடும் திட்டமிடல் |
B |
நவநாகரீக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தியும் |
C |
தாதியியல் |
S |
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமும் (ICT) |
C |
மருந்தகவியல் |
S |
மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானங்கள் |
S |
ஊடுகதிர்ப்படமெடுப்பு |
S |
இயன் மருத்துவம் |
S |
வசதிகள் முகாமைத்துவம் |
C |
கணக்கிடலும் தகவல் முறைமைகளும் |
C |
தகவல் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும் |
C |
பசுமைத் தொழில்நுட்பம் |
C |
தகவல் முறைமைகள் |
C |
நிலத்தோற்றக் கட்டிடக்கலை |
S |
உணவு வியாபார முகாமைத்துவம் |
C |
(நன்றி–பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு)
இது மட்டுமல்லாமல் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியராக வரவேண்டி விண்ணப்பிக்கும் மாணவர்களும் அதிகளவானகற்கை நெறிகளுக்கு க.பொ.த சாதாரணதர ஆங்கிலப் பாடத்தில் Cதர சித்தியைப் பெற்றிருக்க வேண்டியது ஒரு அடிப்படையான விடயமாக தற்போது கருதப்பட்டு வருகின்றது.
எனவே மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அடிப்படைத் தேர்ச்சிகளான எழுதுதல்,வாசித்தல் போன்ற தேர்ச்சிகளில் கவனத்தைக் குவித்து மிகவும் சுலபமான முறையில் ஆங்கில பாடத்தில் சித்தியை பெற்றுக் கொள்ள வாழ்த்துகின்றோம்.
மயில்வாகனம் சுமெக்ஸ்சன்.
ஆங்கிலபாட ஆசிரிய ஆலோசகர்.
(இந்து, பௌத்த கலாச்சார பேரவை– தேசிய இரண்டாம்மொழிக்கற்கை நிலையம்.)
· அரச பாடசாலை ஆசிரியர்.