கிழக்கு மாகாண மாகாணப் பாடசாலைகளில் நிலவூகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை 3– 1 (அ) தரத்துக்கு மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2018.
கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் 23.02.2019ஆம் திகதி நடாத்தப்பட்ட மேற்படி போட்டிப் பரீட்சைக்கு தோற்றிய விண்ணப்பதாரிகளிலிருந்து நேர்முகப் பரீட்சைக்காகத் தெரிவூ
செய்யப்பட்டவர்களது பெயர் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு செய்வதற்கான விளம்பரத்திற்கு அமைய 04.01.2019ம் திகதியில் அனைத்து தகைமைகளையூம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என விண்ணப்பதாரி நேர்முகப் பரீட்சையின் போது உறுதிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு நேர்முகப் பரீட்சையில் தகைமைகளை உறுதிப்படுத்தும் விண்ணப்பதாரிகள் மாத்திரம் பிரயோகப்பரீட்சைக்காக அழைக்கப்படுவர். இப் பிரயோகப் பரீட்சையானது நேர்முக பரிட்சையினை
முடிவூற்றவூடனே நடாத்தப்படுவதுடன் அது தொடர்பான விபரம் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்படும் கடிதத்தினால் தங்களுக்கு வழங்கப்படும். நேர்முகப்பரீட்சை 2019.03.12 – 2019.03.16 ம் திகதி வரை நடாத்தப்படும்.
பெயர்பட்டியல் (திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு)