2021 ஆம் ஆண்டில் தரம் 06 இல் நுழைவதற்கு அண்மையில் வெளியிடப்பட்ட புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி மாவட்ட வெட்டுப்புள்ளி மேல் பெற்றுத் தகுதி பெற்ற மாணவர்களுக்கு புதிய பாடசாலைகளில் அனுமதி பெற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை இம் மாதம் 10 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் மற்றும் அறிவுறுத்தல் துண்டுப்பிரசுரங்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபரிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு பெற்றோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அந்த விண்ணப்பங்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்டு இந்த மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் பிள்ளைகள் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை அதிபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இதற்கிடையில், கோவிட் -19 தொற்றால் மூடப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மாணவர்களின் விண்ணப்பங்களை பாடசாலைகளுக்கு கொண்டு வருவதற்கு பரிந்துரைக்கப்பட்ட சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு கல்வி அமைச்சு வலய அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய வலய அலுவலகங்களின் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
.