தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகள் 3500 பேரக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சின் எந்த நடவடிக்கையும் ஒழுங்காக இடம்பெறவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலைக்கு எதிராக நாளை 17 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தயாராகியுள்ளது.
இந்த டிப்ளோமா தாரிகள் தமக்கான பாடசாலையை தெரிவு செய்யும் செயற்பாடு ஒன்லைனில் இடம்பெறுகிறது. ஒன்லைன் முறை கடந்த 9 ஆம் திகதி இரவு ஆரம்மாகி 17 ஆம் திகதி முடிடைகிறது.
எனினும் இதற்கிடையில் மூன்று முறை ஒன்லைன் முறை இற்றைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக டிப்ளோமாதாரிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஒன்லைன் முறையில் சரியான தகவல்களை வழங்கினாலும் பிழையான தகவல்களை காண்பிப்பதாகவும், வெற்றிடமான பாடசாலைகள் தமது மாகாணத்தில் காணப்பட்ட போதிலும் வேறு மாகாணத்தை மாத்திரமே தெரிவாகக் காண்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறே 2017 ஆம் ஆண்டு உள்ளீர்ப்பு இடம்பெற்ற போது காணப்பட்ட வெற்றிடங்கள் அல்லது வேறு வெற்றிடங்களை காண்பிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவற்றை சரிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகள் ஏற்பட்டால் அழைக்குமாறு வழங்கப்பட்டுள்ள இலக்கங்கள் எதற்கும் பதிகளிப்பதற்கு யாரும் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழந்துள்ளன.
எனவே, நாளை காலை 10 மணிக்கு இசுறுபாய முன்னால் அணி திரளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.