க.பொ.த சாதாரண தரத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களது இடமாற்றங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய பாடசாலைகளில் ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்ற 2021 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் வழங்கப்பட்ட போதிலும்,
இடமாற்றம் பெற்ற க.பொ.த சாதாரண தரத்தில ்கற்பிக்கும் ஆசிரியர்களது இடமாற்றங்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடியும் வரை ஒத்திவைக்க கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, க.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் இவ்வாறு இடமாற்றம் பெற்றவர்களது பெயர் விபரங்களையும் அவர்களது நேரசூசியின் பிரதியையும் கல்வி அமைச்சின் இடமாற்றக் கிளைக்கு அனுப்பி வைக்குமாறு அதிபர்கள் வேண்டப்பட்டுள்ளனர்.