பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் 26 ஆம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சர் டலஸ் அலக பெரும தெரிவித்துள்ளார்.
கோவிட்19 தொற்று அச்சம் முற்றாக நீங்கிய பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்த கல்வி அமைச்சர், இது தொடர்பாக பெற்றார் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் குறிபிட்டார்.
மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று இடம் பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டலஸ் அலகபெரும இதனைத் தெரிவித்தார்.