பாடசாலைக்கு பிள்ளைகள் வருகை தருவதை அதைரியப்படுத்தும் வகையில் செயற்படும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு எச்சிரித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு, சில அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு மாணவர்களை வரவேண்டாம் என வற்புறுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பாடசாலை நடவடிக்கைகளை ஸ்தம்பிதமடையும் வகையில் செயற்படும் நபர்கள் மற்றுமு் குழுக்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்துப் பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்துவற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடடிவக்கைகள் தொடர்பில் இவ்வறிக்கையில் நினைவுகூரப்பட்டுள்ளது.
2019 ஆண்டின் இரண்டாம் தவணைக்காக தரம் 6 தொடக்கம் 13 வரை கடந்த திங்களன்று பாடசாலைகள் ஆரம்பமாகின.
எனினும் திங்கள், செய்வாய் போன்று இன்றும் பாடசாலைகளுக்கு மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே சமூகமளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.