ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர அரச ஊழியர்களுக்கு ஒரு சம்பளத்தை அல்லது அதில் ஒரு பகுதியை அரசுக்கு நன்கொடையாக வழங்குமாறு கோரியுள்ளமை அநீதியானதாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், அரசு நிறுவனங்களின் தலைவர்கள் ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதற்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது என்பதையும், ஜனாதிபதியின் செயலாளரும் அத்தகைய அழுத்தத்தை மறைமுகமாக ஊக்குவித்துள்ளார் என்பதையும் சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
இப்போதைய சூழ்நிலையில் மக்களுக்கு அதிக செலவு ஏற்பட்டுள்ளது. அதற்கிடையில் சம்பளத்தின் பகுதியைக் கோருவது அநீதியானது என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.