நாளை (07) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் சளி மற்றும் இருமல் உள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார திணைக்களம் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான அறிகுறிகளுடன் கூடிய பிள்ளைகள் குணமடைந்தவுடன் பாடசாலைக்கு அனுப்பப்படுவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பது முக்கியம், குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கோவிட் தடுப்பூசி பெற மாட்டார்கள்.
பாடசாலைகளில் சிறுவர்கள் ஒன்று கூடுவதை தடுக்க ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் கலாநிதி தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.