பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.
ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்ககைள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உப்புல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட இருக்கிறது.
அடுத்த வாரம் முதல் பல்கலைக்கழகங்களின் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.