18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்கள் பைசர் தடுப்பூசியை தமது பாடசாலைகளில் பெற்றுக் கொள்ளலாம் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 18 மற்றும் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் பாடசாலைகளில் வழங்கப்படும் என்றும் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியவர்களுக்கு குறித்த பெர்தச் சுகாதார பணிமையில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.