2000 பிராந்திய கற்றல் நிலையங்கள் இன்று முதல் இயங்குகின்றன.
இணையவழி ஊடாகக் கற்பதற்கு 2000 கற்றல் நிலையங்களை நிர்மாணித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த கற்கை நிலையங்களின் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மகிந்தோதய நிலையங்கள், வணக்கஸ்தலங்களில் உள்ள கல்வி நிலையங்கள், பொது நிலையங்களில் இவை நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையங்கள் ஆகக் குறைந்தது 10 மடிக்கணினிகள் அல்லது டெப் வசதிகள் கொண்டுள்ளன. இந்நிலையங்கள் காலை 7.00 மணி முதல் 3.00 மணி வரை இயங்கும்.
இதனை நிர்வாகிப்பதற்கு ஆசிரியரகள், அதிபர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்பார்வை செய்தவற்கு மாகாண வலய ரீதியான குழுக்கள் அமைக்கப்பட்டுள்னன.
இதற்கிடையில் இந்நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு இடர்கால கொடுப்பனவு ஒன்றை வழங்குமாறு ஆசிரியர் தொழில் சங்கங்கள் கோரிக்கை விடு்த்துள்ளன.