பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை பயனுள்ள வகையில் மேம்படுத்த மடிக் கணனிகளை பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதற்கான ஆவணத்தை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்தார். இதற்கமைய நாடு முழுவதிலும் 9 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து மாகாணங்களிலும் ஒரு கல்வி வலயம் வீதம் தெரிவு செய்யப்பட்டு தரம் 6 முதல் தரம் 11 வரையான 665 பாடசாலைகளுக்கு லப்டொப் கணனிகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்காக 2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.