உயர் தரம், தரம் 5 என்பன ஒக்டோபர் – நவம்பரில்
ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மாணவர்களுக்கு அதிகூடிய பாடசாலை நாட்களை வழங்குவதுடன், வருடாந்த பாடத்திட்டத்தை முடிப்பதற்கு தேவையான பின்னணியை பாடசாலையில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.
SINHALA