தரம் 05 புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் 20 ஆம் திகதி வெளியீடு
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தயாராகி வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இப்பணிகள் தற்போது இறுதிக்கட் டத்தை எட்டியுள்ளதாக பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார். பரீட்சை பெறு பேறுகளின்படி பிரபல பாடசாலை களுக்கான மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் ஜனவரி 22ஆம் திகதி நடத்தப்பட்டு மார்ச் 13ஆம் திகதி பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3,40,508 பரீட்சார்த்தி கள் தோற்றியிருந்ததுடன் இம்முறை 2,943 பரீட்சை நிலையங்களிலும் 108 விசேட நிலையங்களிலும் நடை பெற்றது.