கொழும்பு மற்றும் ஏனைய நகர்ப்புறப் பாடசாலைகள் அடுத்த ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கிராமப் புறப் பாடசாலைகள் வழமை போல் இயங்கும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளின் தலைமையில் இடம்பெற்ற சூம் கலந்துரையாலில் இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
அதே வேளை பாடசாலை நேரங்களில் மின்சார தடையை அமுல்படுத்தாதிருக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் நிலமையை அவதானித்து மீண்டும் அடுத்த சனிக்கிழமை கலந்துரையாடி எடுத்த வாரத்திற்கான தீர்மானம் எட்டப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது