எதிர்வரும் 6 மாதங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும் என்றும், இது நாம் ஒருபோதும் அனுபவிக்காத காலகட்டமாக இருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆனால் நாம் அதைக் கடந்து செல்ல வேண்டும், அதை மாற்ற முடியாது என்று அவர் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிடும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.