இதுவரை 120000 பேர் தொழிலுக்காக சென்றுள்ளனர். மேலும் 300000 பேரை அனுப்ப ஏற்பாடு
2022 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 100% அதிகரிப்பு என சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டில் 122,000 பேர் மாத்திரமே வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளியேறியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு 300,000 பேரை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அனுப்ப பணியகம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பல நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.