பாடசாலைக்கு தீ மூட்டிய இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணதுறைப் பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் அலுவலகம் மற்றும் கணினி அறை ஆகியவற்றுக்குத் தீ மூட்டிய குற்றச்சாட்டில் இரு மாணவரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்டியில் இந்த 12 மற்றும் 7 வயது மாணவர்கள் இருவரும் தீ மூட்டும் காட்சி பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
பாணதுறை கெசல்வத்த பிரதேச பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிழை செய்தமைக்காக அதிபர் வழங்கிய தண்டனைக்கு பழிவாங்கும் நோக்கோடு இவர்கள் தீ மூட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்று பாணதுறை நீதிமன்றின் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்