புத்தகங்களை ஒட்டுவதற்கான ஒட்டுப்பசை இன்றி சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாடநூல்கள் தேக்கம் அடைந்துள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு சில புத்தகங்கள் கிடைக்காமை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் அவற்றை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அச்சிடப்பட்டாலும் ஒட்டுவதற்கான பசை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பாடநூல்களை வினியோகம் செய்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட பசையைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.