கல்வி அமைச்சின் சுற்றறிக்கை இலக்கம் 37/2023-திகதி 2023.10.26
சகல பாடசாலை அதிபர்களுக்கும்
ஆசிரியர்களின் லீவு, தாமத வருகைச் சலுகை
தாபனக் கோவையின் XII ஆம் அத்தியாயத்தில் 24 ஆம் பிரிவின் மூலம் ஆசிரியர்களின் லீவு தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள நியதிகளுக்கு மேலதிகமாக கல்வி அமைச்சினால் காலத்துக்கு காலம் சுற்றறிக்கைகளும்,அறிவுறுத்தல் கடிதங்களும் வெளியிடப்படுகின்றன.ஆனாலும் ஆசிரியர்களின் லீவு தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் விடயங்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்து பின்வரும் அறிவுறுத்தல்களை விடுகின்றேன்
01.#லீவு_எடுத்தல்
1. விடுமுறையில் செல்வதற்கு முன் உரிய அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் விடுமுறைக்கான முன் அனுமதி பெற முடியாத சந்தர்ப்பங்களில், அதை விரைவில் தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் அவ்வாறு அறிவிக்காவிட்டால் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தேவையான போது சேவையில் இருந்து விலகிச் சென்ற உத்தரவை விடுக்கத்தக்க அந்த ஆசிரியர் தொடர்பான முழுமையான விபரம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும்
11. விடுமுறை பதிவேட்டில் அந்த விபரங்கள் பதியப்பட்ட பின்னர் சகல விடுமுறை விண்ணப்பங்களும் பாடசாலை காரியாலயத்தில் கோவைப்படுத்தி வைக்க வேண்டும்.
சம்பளமற்ற லீவு பணத்தை அறவிடுவதற்காக ,மேலதிகமாக பெறப்பட்ட லீவு விபரங்கள் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிக்கை இடவேண்டும். வலயக் கல்விப் பணிப்பாளர் ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து அந்தப் பணத்தை தாமதமின்றி கழிப்பதை அதிபர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
111.அதிபர்களினால் முடிந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் சேவைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் பதில் கடமை தொடர்பாக பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.லீவு பெற்றுக் கொள்ளாமல்,நியாயமான காரணம் இல்லாமல்,அறிவிக்காமல் சேவைக்கு வராமல் இருக்கும் எந்த ஆசிரியரும் சேவையை விட்டுச் சென்ற ஒருவராகக் கருதப்படுவார் என்பதை உங்கள் ஆசிரியர் குழாத்துக்கு அறிவிக்க வேண்டும்
02.#குறுகிய_லீவு
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் உச்ச அளவில் ஒரு மணித்தியாலத்துக்கு மட்டுப்பட்ட வகையில்,மாதத்தில் இரண்டு சந்தர்ப்பங்களுக்கு கூடாத வகையில் அமய லீவுக்குப் பொருந்தக் கூடிய அல்லது சமமான காரணங்களுக்காக குறுகிய லீவை வழங்க முடியும்.அவ்வாறான லீவை வழங்கும்போது குறிப்பிட்ட ஆசிரியரினால் குறுகிய லீவை குறிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பு இட்டு அதிபரினால் அனுமதி வழங்கப்படுவது நிகழ்ந்ததா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்
03.#தாமதமாக_வருதல்
1.தமது பாடசாலையில் சேவையாற்றும் சகல ஆசிரியர்களும் பின்வரும் வகையில் செயல்படுகின்றார்களா என்பதை அதிபர் கவனித்துக் கொள்ள வேண்டும்.
(அ )குறிப்பிட்ட நேரத்திற்கு பாடசாலைக்கு வருகின்றார்களா என்பது.
(ஆ )பாடசாலை முடியும் வரை கடமை விடயங்களில் ஈடுபடுகின்றார்களா என்பது.
(இ ) வரவு புத்தகத்தில் வருகை நேரத்தைப் போல செல்லும் நேரத்தையும் குறிப்பிட்டு கையொப்பம் இட்டுள்ளார்களா என்பது
11.பாடசாலை ஆரம்பமாகவுள்ள நேரத்தில் இருந்து 15 நிமிடங்கள் கடந்தவுடன் சிவப்பு கோடிட்டு வரவு புத்தகத்தை மூடுவதுடன்,பாடசாலை ஆரம்பமாகிய பின்னர் 3 வேலை நாட்கள் நாளொன்றுக்கு அரை மணித்தியாலயத்துக்கு குறைந்த நேரம் தாமதமாகி வந்தால் அந்த தாமத வருகை அரைநாள் லீவாக கருதப்பட வேண்டும் என்பதோடு,இந்த சலுகை மாதத்துக்கு ஒருமுறை மட்டும் மட்டுப்படுத்தப்பட வேண்டும்
111.பாடசாலை ஆரம்பமான பின்னர் ,அரை மணித்தியாலயத்துக்கு அதிகமாக தாமதமாக வரும் எல்லா சந்தர்ப்பங்களும் அரைநாள் லீவாகக் கருதப்பட வேண்டும் அரை நாள் லீவு பெறுவதற்கு குறைந்த பட்சம் பாடசாலை வேலை மணித்தியாலங்களில் அரைப் பகுதி அல்லது 2 1/2மணித்தியாலங்கள் எனபவற்றில் கூடிய நேரம் செய்ய வேண்டும்.
IV .வழக்கமாக தாமதமாக வருகின்றவர்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக சுயவிபரக் கோவையில் குறிப்பிடுவதற்காக வலயக் கல்விக் காரியாலயத்துக்கு அறிக்கை இடவேண்டும்.
எம்.என்.ரணசிங்க
செயலாளர்
பிரதிகள்
1.சகல மாகாண கல்விப் பணிப்பாளர்கள்
2.சகல வலயக் கல்விப் பணிப்பாளர்கள்