புதிய சீர்திருத்தத்திற்கு அமைவாக சம்பளத்தை மாற்றியமைத்தல் – இலங்கை அதிபர் சேவை
அதிபர் சேவை சம்பள அளவுத் திட்டத்தின் படி, இடைநிலை உத்தியோகத்தர்கள்கள் குற்த்த நிலையில் உயர்ந்த பட்சத்தை எட்டியபின்னர், ஏற்பட்டுள்ள சம்பள ஏற்றம் தொடர்பான பிரச்சினைக்கு கல்வி அமைச்சு விளக்கம் வழங்கியுள்ளது.
அக்கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு
26.07.2022 தேதியிட்ட இலங்கை வாண்மைத்துவ அதிபர்கள் சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் மேற்படி விடயத்துடன் தொடர்புபட்டது
02. இலங்கை அதிபர் சேவை உத்தியோகத்தர்களுக்கிடையில் சம்பள விகிதத்தின் இடைநிலை தரத்தை எட்டிய உத்தியோகத்தர்களின் சம்பளம் உயர்ந்தபட்டசத்தை அடைந்த உத்தியோகத்தர்களின் சம்பளம் நிர்ணயம் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாக மேற்படி கடிதத்தை சமர்ப்பித்துள்ள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
03. அரச நிர்வாகச் சுற்றறிக்கை 03/2016(iv) இன் படி, சம்பள மாற்றம், சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையின் பிரிவு 03 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி படிப்படியாக திருத்தம் செய்யப்பட வேண்டும் மேலும் இது தொடர்பாக மேலும் தெளிவுபடுத்தல்கள் தேவைப்பட்டால், ஒரு அதிகாரியின் சம்பளம் சரிசெய்தல் பிரச்சனையை பின்வரும் ஆவணங்களுடன் உதாரணங்களுடன் சமர்ப்பிக்கவும்.
- அதிகாரியின் நியமனக் கடிதத்தின் சான்றளிக்கப்பட்ட நகல்.
- அனைத்து சம்பள மாற்ற கடிதங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள்
- அதிகாரியின் நடத்தை தொடர்பான அறிக்கை
නව ප්රතිසංස්කරණයට අනුකූලව වැටුප් සංශෝධනය – ශ්රී ලංකා විදුහල්පති සේවය