சுகாதார தரப்பினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறும் கடந்த மார்ச் மாதம் கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்று நிருபத்தின் வழிகாட்டல்களையும் கவனத்தில் கொண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் படி, ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மாத்திரமே அமர முடியும் எனவும், 16-30 மாணவர்கள் ஒரு வகுப்பில் காணப்படின், இரு குழுக்களாக வகுப்புக்களை நடாத்துமாறும் 30 ஐ விட அதிகமாயின் 3 குழுக்களாகவும் வகுப்புக்களை நடாத்துமாறு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளது.