ஆகஸ்ட் 3ஆம் திகதி கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு பொலிஸ் பிணை வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
தாம் தலையிட்டு அந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், அது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஜோசப் ஸ்டாலினுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும், ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் தண்டிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி தொழிற்சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
எந்த நேரத்திலும் ஸ்டாலின் சார்பில் ஜனாதிபதி முன் ஆஜராகுவேன் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எந்த நேரத்திலும் ஸ்டாலின் சார்பில் ஜனாதிபதி முன் ஆஜராகுவேன் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (03) பிற்பகல் கொழும்பு கோட்டை குருமதுரைக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்பவம் தொடர்பில் கடந்த மே மாதம் 28ஆம் திகதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.