தேசிய விலங்காக பெயரிடப்பட்டுள்ள மர அணிலை அகற்றிவிட்டு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அழிந்துவரும் விலங்கொன்றை தேசிய விலங்காக பெயரிடுவது தொடர்பில் விவசாய, வனவிலங்கு மற்றும் வனவள அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சொந்தமில்லாத மர அணிலுக்கு எதன் அடிப்படையில் தேசிய விலங்கு என பெயர் சூட்டப்பட்டது என கண்டறிய முடியவில்லை என விவசாய, வனவிலங்கு மற்றும் வனவள அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெயர் சூட்டப்பட்ட தரப்பினரை வெளிப்படுத்தி அதற்கு பெயர் சூட்டுவதற்கான காரணங்களை அவர்களிடம் கேட்டறிந்த பின்னரே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாற்றம் தொடராக தேசிய மரபுரிமை திணைக்களத்துடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது பயிர்களுக்கு அதிகளவில் சேதம் விளைவிப்பது மயில் மற்றும் மர அணில் ஆகிய இரண்டு விலங்குகள் எனவும், தென்னை மற்றும் கொக்கோ விளைச்சலில் அதிகளவான விளைச்சல் அழிவடைவதாகவும் மர அணில் காரணமாகும் என்றும் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டதன் காரணமாக பயிர் சேதத்தை குறைக்க எந்த சட்ட நடவடிக்கையும் மர அணிலுக்கு எதிராக எடுக்க முடியாத காரணத்தினால் மேற்படி பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.