இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் உட்பட கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுதலை செய்யக் கோரி நாளை (4) அனைத்துப் பாடசாலைகளின் முன்னாலும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இது தவிர ஜோசப் ஸ்டாலினின் கைதைக் கண்டித்து நாளை காலை 10.30 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.