தற்போது நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஆரம்பிப்பது சாத்தியமில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் விடுதிகளில் தங்கி கல்வி பயில்வதால் கொவிட் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, பல்கலைக்கழக கட்டமைப்பு தற்போதுள்ள 50 சதவீத திறனில் தொடர்ந்தும் செயல்படும் என்று அவர் கூறினார்.
விடுதிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் பொதுவாகப் பயன்படுத்துவதால் மாணவர்களிடையே கோவிட் பரவுவதைத் தடுக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.