வரவு செலவுத் திட்டத்தில் அதிபர் ஆசுிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான யோசனை உள்ளடக்கப்படவில்லை என்பதைக் கண்டித்து கல்வித்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தன.
இன்று காலை பாராளுமன்றத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பிரதான ஆசிரிய தொழில் சங்கங்கள் கலந்து கொண்டிருந்தன.
வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் இரண்டாம் வாசிப்பின் கீழ் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெறுவதற்கு காலம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.