உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் இலங்கையின் பொருளாதரம் பாதிக்கப்பட்டுள்ளபோதும், குறைந்த நடுத்தர வருமானமீட்டும் நாடுகள் தரத்திலிருந்து, உயர்ந்த நடத்தர வருமானம் ஈட்டும் நாடுகள் தரத்துக்கு இலங்கை உயர்த்தப்பட்டுள்ளது. உலக வங்கி ஜூலை 1ஆம் திகதி முதல் இலங்கையை உயர்ந்த நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக அறிவித்துள்ளது.
உயர்ந்த வருமானம் ஈட்டும் நாடுகள், உயர்ந்த நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகள், குறைந்த நடுத்தர வருமானமீட்டும் நாடுகள், குறைந்த வருமானமீட்டும் நாடுகள் என பொருளாதா ரீதியில் உலகின் நாடுகளை உலக வங்கி வகைப்படுத்தியுள்ளது. தலா வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் மொத்தத் தேசிய வருமானத்தை அட்லஸ் முறையில் கணிக்கப்படுகிறது. நாடுகளின் தரங்கள் ஒவ்வொரு வருடமும் ஜூலை முதலாம் திகதி மேம்படுத்தப்படும்.
இரண்டு காரணிகளின் அடிப்படையில் நாடுகளின் வகைப்படுத்தல்கள் அமைகின்றன. பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், நாணயமாற்றுப் பெறுமதி மற்றும் சனத்தொகை என்பவற்றுடன் இணைந்து மாறக்கூடியதாக அந்நாட்டின் மொத்த தேசிய வருமான தலா வருமானம் காணப்படும். தேசிய கணக்கு முறைகளில் திருத்தங்களை மேற்கொள்வது மற்றும் தகவல்கள் என்பன மொத்த தேசிய வருமான தலா வருமானத்தில் தாக்கம் செலுத்தக்கூடியவை
கடந்த வருடம் வரை வருமான வகைப்படுத்தல் பகுப்பாய்வு நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவதுடன், இது உலக வங்கியின் கடன் வழங்கும் விடயத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.