பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சுகரக்ஷா பாதுகாப்புக் காப்புறுதி 02.12.2020 முதல் 01.12.2021 வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இம்முறை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் சுரக்ஷா காப்புறுதிக்கான நிறுவனமாக பொறுப்பேற்றுள்ளது.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்த்தில் கைச்சாத்திடும் நிகழ்வு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் அமைச்சில் நடைபெற்றது.
முன்னர் 2010-05-31 முதல் 2020-09-30 வரை கல்வி அமைச்சகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீடித்து ஒந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்படி, ஒப்பந்தம் 2021-12-01 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
30-05-2020 க்குப் பிறகு ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பான காப்பீட்டுக் கோரல்களுக்கானகொடுப்பனவைப் பெற தொடர்புடைய விண்ணப்பங்களை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
காப்பீட்டு கோரிக்கைகளை கல்வி அமைச்சுக்கு அனுப்ப வேண்டாம் என மாணவர்கள், பெற்றார், ஆசிரியர்கள் மற்றும் வலயக் கல்வி அலுவலங்களை தெளிவுபடுத்துமாறு கல்வி அமைச்சர் வேண்டிக் கொண்டார்.