கணினி அல்லது தொலைக்காட்சி வசதியற்றிருப்பினும் வீட்டிலிருந்து கல்வியைத் தொடர்வதற்காக அச்சடிக்கப்பட்ட செயல்நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தரம் 1, மற்றும் தரம் 2 ஆகியவற்றுக்கு வெளியிடப்பட்டுள்ள செயல்நூல்களை யுனிசெப், சேவ் த சில்ட்ரன், ரூம் டு ரீட், சைல்ட் பண்ட சிரிலங்கா ஆகிய நிறுவனங்களின் உதவியுடன் தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வி அமைச்சு என்பன இணைந்து வெளியிட்டுள்ளன.
665 000 மாணவர்களை இலக்காகக் கொண்டு தரம் 1, 2 இரண்டுக்கான செயற்பாட்டடைகளின் தொகுதி வெளியிடப்பட்டுள்ளது. இவை மாகாணக் கல்வித் திணைக்களங்கள் ஊடாக வினியோகம் செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளன.
தரம ்1. 2 ஆகியவற்றுக்கான தாய்மொழி, கணிதம் மற்றும் சுற்றாடல் சார் செயற்பாடுகள் முதலான பாடங்களுக்கான உள்ளடக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வீட்டில் பெற்றாரின் உதவியுடன் இவற்றை மாணவர்கள் கற்பதற்கு இலகுவான வடிவில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.
தமிழ், மற்றும் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இச்சசெயலட்டைகளை மாகாணக் கல்வித் திணைக்களங்கள் வலயங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு வினியோகிக்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நூல்களை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கும் நிகழ்வு 26 ஆம் திகதி கல்வி அமைச்சர் தலைமையில் கல்வி அமைச்சிலே இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்வி அமைச்சின் செயலாளர், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாகயம் கலாநிதி சுனில் ஜயன்த நவரத்ன மற்றும் அதிகாரகள் கலந்துகொண்டனர்.