பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் ஹெக் செய்யப்பட்டு இந்த ஆண்டு உயர்தர பரீட்சை முடிவுகளை உத்தியோகபூர்வமாக காண்பிக்கும் இணையதளம் ஒன்றை இயங்கி வந்த காலி ஆண்கள் பாடசாலை ஒன்றின் 13ஆம் வருட மாணவன் ஒருவரை குற்ற விசாரணை திணைக்களம் நேற்று (08ஆம் திகதி) கைதுசெய்யப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கடந்த திங்கட்கிழமை (05) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்கி ரந்தெனியவிடம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் நீண்ட விசாரணையின் பின் சந்தேகமடைந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரீட்சைப் பெறுபேறுகளை வழங்கும் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தின ஊடாக வேறு நபர்களின் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியாத வகையில் தயாரிக்கப்பட்டிருப்பினும், இந்த மாணவன் தயாரித்த இணைணயத்தளத்தினூடாக குறித்த பெயரைக் கொண்ட அனைத்து மாணவர்களினதும் பெறுபேறுகளை பார்க்க முடியும் என்பது விசேடமானது.
கைது செய்யப்பட்ட மாணவன் குறித்த பாடசாலையில் தொழிநுட்ப பிரிவில் கற்பதோடு மாணவரின் பெற்றோர் இருவரும் பிரபல பாடசாலைகளின் ஆசிரியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த இணையத்தளம் தொடர்பாக முறைப்பாடு கிடைத்தை அடுத்து இதனை இயக்குபவர் தொடர்பாக தேடும் போது, இது வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டு அங்கிருந்து இயக்கப்படுவதாக காண்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தமையால் – உரிய நபரை தேடிக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கனிணி குற்றங்கள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, இஷார கயாஸ்ரீ உட்பட குழுவினர் இது தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொண்டு செல்லும் போது, இந்த இணையத்தளத்துடன் தொடர்புடைய டெலிகிறாம் குழுமம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த குழுவிற்குள் வேறு பெயர்களில் நுழைந்த விசாரணை அதிகாரிகள் அந்த குழுவில் இருக்கும் தொழிநுட்ப வல்லுனர்களின் தகவல்களைத் திரட்டியுள்ளனர்.
இணையத்தளங்களுக்கு ஹெக்கர் தாக்குதல் நடாத்துவதற்காக வழங்கப்பட்ட கொடுப்பனவுக்குப் பயன்படுத்த கடனட்டை தரவுகள் மற்றும் இதர விபரங்களை விசாரணை அதிகாரிகள் திரட்டியுள்ளனர். அத்தோடு இந்தக் குழுமத்தில் தொழிநுட்பப் பிரிவில் கற்கும் மாணவர்களே அதிகம் இருந்துள்ளமையும் கண்டறிந்துள்ளனர். அதனூடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தெஹிவளைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட மாணவன் மூலம் கிடைத்த தகவலை அடுத்து குழுவின் உறுப்பினர்களது தொலைபேசி இலக்கங்கள் பெறப்பட்டுள்ளன.
இணையத்தளத்தை ஊடுருவியதாக நம்பப்படும் மாணவன் எந்த அழைப்புக்களையும் ஏற்படுத்தி இருக்காமையினால் அவரின் தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடிக்க அதிகாரிகளால் முடியவில்லை. அந்தக் குழுமத்தில் ஹெக்கர்கள் போன்று ஏனைய அங்கத்தவர்களுடன் கருத்துப் பரிமாறி இறுதியில் குறித்த மாணவன் தொடர்பாக தகவல்கள் பெற்று கைது இடம்பெற்றுள்ளது.
செயலி ஒன்றின் மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தின் பலவீனங்களைக் கண்டறிந்து அதன் பின்னர் Bruit Force தாக்குதல் நடாத்தியதாகவும் ஆறு மணி நேரமாக, உயர் தரப் பெறுபேறுகள் அடங்கிய ஆவணத்தை தரவிறக்கம் செய்ததாகவும் மாணவன் தெரிவித்துள்ளார். இதனைப் பரீட்சார்த்த முயற்சியாகவே செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாணவன் கனிணித் தொழிநுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர் என்றும் கைத்தொலைபேசி மற்றும் மடிக்கணினியைப் பயன்படுத்தியே இதனை செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த டெலிகிறாம் குழுமத்தில் உள்ள ஏனையவர்கள் ஏதேனும் குற்றங்கள் செய்துள்ளனரா என்பது தொடர்பாக ஆராயுமாறு குற்றவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் லகி ரன்தெனிய அறிவுரை வழங்கியுள்ளார்.