மாணவன் ஒருவனை ஆசிரியர் மிக மோசமாக தாக்கியதில் மாணவன் கையில் காயம் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் கிளிநொச்சி, கோணாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் கடந்த வாரம் தனது துவிச்சக்கர வண்டியை தொலைத்ததையடுத்து மூன்று நாட்களாக பாடசாலைக்குச் செல்லவில்லை எனவும் இவ்வாரம் பாடசாலைக்குச் சென்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்கு வராத நாட்களில் வழங்கப்பட்ட வீட்டுப் பாடங்களை மாணவன் செய்யவில்லை எனத் தெரிவித்து ஆசிரியர் பெரிய தடி ஒன்றினால் மாணவனை தாக்கியுள்ளார் என தெரியவருகிறது.
இதனால் கையில் காயம் ஏற்பட்டுள்ளதோடு மற்றும் உட் காயம் காரணமாக கையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தியதோடு இது தொடர்பில் கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
![வீட்டு வேலை செய்யவில்லை: மாணவனை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர் 2 Screenshot 20220803 124058](https://teachmore.lk/wp-content/uploads/2022/08/Screenshot_20220803_124058.jpg)