சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை மீண்டும் திறக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
உணவகங்களை திறப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு வகுப்பிற்கும் இடைவேளைகள் தனித்தனியாக வழங்க வேண்டும்.
ஒரு வகுப்பின் அனைத்து மாணவர்களுக்குமான உணவை ஒரு மாணவன்/ மாணவி ஓடர்செய்ய வேண்டும். வைக்க வேண்டும். உரிய நேரத்தில் உணவு தயாரிக்கப்பட்டு வரங்கப்படுவதையும், வகுப்புகளுக்கு சுகாதாரமாக வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய உணவக உரிமையாளர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் விதிமுறைகள் கூறுகின்றன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சமூக இடைவெளியைப்ப பேசி மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது