கொரோனா தடுப்புக்கான செயலணியின் பரிந்துரைகளுக்கு அமைய நீண்ட காலத் திட்டமிடல்களுடன் பாடசாலைகள் நாளை 23 ஆம் திகதி ஆரம்பமாவதாகவும் இது உடனடியான ஏற்பாடுகள் அல்ல என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஹிரு டிவியில் பத்திரிகைக் கண்ணோட்டம் தொடர்பான நிகழ்ச்சியில் அவர் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.
இந்த தீர்மானம் உடனடியானதல்ல என்றும் நீண்டகால புரிதல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு, பெற்றார்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆசிரியர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்புக்கள் அரசாங்கத்தில் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் நிலையில் கல்வி அமைச்சின் செயலாளர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.