இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் தரம் 12 மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற பொது தகவல் தொழில்நுட்ப பாடத்தின் (GIT) முன்னோடி தகவல் தொழில்நுட்ப பரீட்சை இன்று (11) ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்பரீட்சை நாடு முழுவதிலுமுள்ள 655 பரீட்சை நிலையங்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இப்பரீட்சை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை முதல் தடவையாக ஒன்லைன் முறைமையில் முன்னோடிப் பரீட்சை மாத்திரம் நடைபெறும் எனவும் இதற்கான எழுத்துப் பரீட்சை வேறு ஒரு தினத்தில் நடைபெறும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
No Result
View All Result
error: Content is protected !!