இலங்கை அதிபர்கள் சேவையின் மூன்றாம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித் பரீட்சைக்கு பதிலாக கட்டமைக்கப்பட்ட நேர்காணல் மூலம் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்டு வேளையில், போட்டிப் பரீட்சை மற்றும் நேரடியான நேர்முகத் தேர்வு நடத்துவதற்கும் முறையான நியமனங்கள் செய்வதற்கும் கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
அதன்படி, நீண்ட காலமாக ஆசிரியர் சேவையில் தகுதி பெற்றவர்களும், சேவை பிரமாணக் குறிப்புக்கு ஏற்ப தகுதி பெற்ற ஆசிரியர் சேவையின் பிறரும் அதிபர் சேவைக்கான மூன்றாம் தர ஆட்சேர்ப்பு நேர்காணல்களுக்கு தோற்ற முடியும்.
அதிபர் சேவையில் I, II மற்றும் III தரங்களுக்கு 4,600 வெற்றிடங்கள் உள்ளன.
இதற்காக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.