அரச ஊழியர்கள் தற்காலிகமாக தமது சேவையிலிருந்து விலகி தனியார் துறையில் சேவையாற்ற அனுமதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 7 பேர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான, அரச ஊழியர்கள் சேவை மூப்பு மற்றும் ஓய்வூதிய ப் பாதிப்பின்றி 5 வருட விடுமுறை பெறுவதற்கான சுற்றுநிருபத்தின் படி, அந்த விடுமுறையை உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பணி புரிவதற்கு விடுமுறை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அதற்கான வேறு சில ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படடவேண்டிய தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அது தொடர்பாக ஆராயவே 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.