இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் எரிபொருள் கொள்வனவுக்கான டொலர்களை கொள்வனவு செய்வதற்கு போதிய ரூபா இல்லாததால், நாட்டில் எரிபொருள் விநியோகம் முற்றிலுமாக சிதைவடைவதைத் தடுப்பதற்காக பணத்தை அச்சிடுவதற்கு மத்திய வங்கி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வியாழன் அன்று மத்திய வங்கியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கலாநிதி வீரசிங்க இதனைத் தெரிவித்தார். இதற்காக திறைசேரியில் இருந்து 217 பில்லியன் ரூபா கோரப்பட்டபோதிலும் திறைசேரியால் இவ்வளவு பெரிய தொகையை உடனடியாக வழங்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையொட்டி திறைசேரி மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்ற வங்கியின் ஒரே வழி பணத்தை அச்சிடுவதே என்றும் அவர் கூறினார்.
மத்திய வங்கியின் நாணயச் சபை கடந்த வாரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றொரு கோரிக்கைக்கு சாதகமாக பதிலளித்தது. 185 பில்லியன் எரிபொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் நாட்டில் பாரதூரமான நிலைமை ஏற்படும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.