பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது மற்றும் கடந்த வாரம் பாடசாலை கற்கைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் தொடர்பில் ஆராயும் நோக்கில் கல்வி அதிகாரிகள் இன்று (03) காலை கூடவுள்ளனர்.
கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நிஹால் ரணசிங்க, கல்வி அமைச்சில் தெரிவித்தார்
இதில் கல்வி அமைச்சர், அமைச்சின் மேலதிக செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட கல்வி அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் தரவுகள் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு எதிர்காலத்தில் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.