ஆகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதங்களில் பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்பட்டு பாடசாலை நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் ப்ரேமஜயந்த தெரிவித்தார்.
ஜூலை முதல் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றார்.
உயர்தர (உ/த) ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஊடாக மற்றுமொரு பயிற்சியை வழங்கும் அதேவேளை, பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக வினா விடை மீளாய்வு மற்றும் மேலதிக திட்டங்கள் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
சிறப்புக் கல்விச் செயற்பாடுகள் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளதுடன், ஒன்பது மாகாணங்களிலும் உள்ள கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட தினசரி தரவுகள் மற்றும் தகவல்களுடன் அனைத்து பயிற்சி அமர்வுகளையும் ஜூலை மாதம் முதல் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் கூறினார்.